Posts

Showing posts from September, 2021

பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்...

Image
பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... ஆரூர் சுந்தரசேகர். பஞ்ச பூதங்களின் மொத்த உருவே இப்பிரபஞ்சம். “ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ” என்கிறது உபநிஷதம். உலகில் சிருஷ்டிக்கு அடிப்படை இந்த ஐந்துமே ஆகும் அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள். இதேபோல மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் திருமூலர் தன்பாடலில், “அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது” என குறிப்பிட்டுள்ளார். “பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தரமாறில் தோன்றும் பிறப்பு” என்கிறார் ஒளவையார். பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது என்று ஒளவையார் பாடியுள்ளார். “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம...

நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!!

Image
நவராத்திரியில் நலன் பயக்கும் நவதுர்க்கைகள்!! ஆரூர் சுந்தரசேகர்.  துர்க்கை என்றால் வடமொழியில் “வெல்லமுடியாதவள்” என்றும், தமிழில் வெற்றிக்கு உரியவர் என்றும் பொருள். நவராத்திரியே துர்க்கையின் முக்கியமான வழிபாடாகும். அன்னை பராசக்தியின் அனுக்கிரகத்தினை பெற்றிட, சக்தியின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேஷமானது. நவதுர்க்கை என்பது துர்க்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். ‘நவ’ என்றால் ஒன்பது என்பதாகும்.. பல்வேறு வேதங்களிலும், வராஹ புராணத்திலும் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளதாக கூறுப்பட்டுள்ளது. நவதுர்க்கைகளின் பெயர்களும், அவரது அம்சங்களும் ஸ்லோகமாக களபிரம்மதேவரால் வராஹ புராணத்தில் காணப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை கொண்டாடப்பட்டு அடுத்த நாள் விஜயதசமியுடன் முடிகிறது. அன்னை பராசக்தியை முதல் மூன்று நாட்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களும் மஹாலக்ஷ்மியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம். அதே சமயம் நவதுர்கா என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை குறிக்கும் சைலபுத்ரி, பிரமசா...

அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!!

Image
அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!! ஆரூர் சுந்தரசேகர். நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து கொண்டு, பூமியில் நாம் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள். அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள், திக் என்றால் திசை எனவே அஷ்டதிக் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே அஷ்டதிக் என்கிறோம். இந்த அஷ்டதிக் அதிபதிகளான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் பூமியை காத்து அருள் புரிகின்றனர். அஷ்டதிக்கு பாலகர்களை ‘எண்திசை நாயகர்கள்’ என்றும் அழைக்கிறோம். இவர்களை வணங்கினால், சகல சௌபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அஷ்டதிக் பாலகர்களை ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் கோபுரங்கள், கோயில் மூலஸ்தான வாயில்கள், கோயில் பிரகார சுவர்கள், கோயில் மேற்கூரைகள் போன்றவற்றில் காணலாம். பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கா...

சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !!

Image
சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !! ஆரூர் சுந்தரசேகர்.  பாரத தேசத்தில் பழங்காலம் தொட்டு சக்தி வழிபாடு இருந்துவருகிறது. சப்த கன்னியர் அல்லது சப்த மாதாக்கள் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். அன்னை ஆதிபராசக்தியின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள். இவர்களே சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோர்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களை பற்றி கூறப்பட்டுள்ளன. கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம். சப்த கன்னிகள் உருவான வரலாறு:  சண்டன், முண்டன் என்ற அரக்கர்கள் தவம் செய்து பிரம்மனிடம் “பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை ...

திருவிளையாடல் புராணம் தந்த பரஞ்சோதி முனிவர்...

Image
திருவிளையாடல் புராணம் தந்த பரஞ்சோதி முனிவர்... - ஆரூர் சுந்தரசேகர்.   தமிழ் மொழியில் உள்ள புராணங்களுள் மூன்றினை சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றுகின்றனர். சேக்கிழாரின் பெரியபுராணம் சிவனின் வலக்கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் சிவனின் நெற்றிக் கண்ணுடன் போற்றி சிறப்பிக்கப்படுகின்றன. திருவிளையாடல் புராணத்தில், சிவபெருமானே பூலோகத்திற்கு வந்து திருவிளையாடல்கள் செய்ததாக அமைந்துள்ளது. இந்த புராணம் மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை பற்றிக் கூறுகிறது. மதுரை பற்றி பல புராணங்கள் இருந்தாலும், மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடல் புராணம் மட்டுமே. வியாசர் இயற்றிய வடமொழி நூலான ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியத்தை பின்பற்றியே இந்நூல் எழுதப்பட்டது என ஒரு கருத்தும் உள்ளது. பரஞ்சோதி முனிவர் யார்? பரஞ்சோதி என்ற பெயருடன் தமிழகத்தில் புகழுடன் விளங்கியவர்கள் இருவர். ஒருவர் பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறுதொண்டராகி...

சங்ககாலப் புலவர் நக்கீரரும் திருமுருகாற்றுப்படையும்...

Image
சங்ககாலப் புலவர் நக்கீரரும் திருமுருகாற்றுப்படையும்... ஆரூர் சுந்தரசேகர்.   சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் மிகவும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் முதன்மையாக விளங்கியவர் நக்கீரர். நக்கீரர் என்றால் நல்ல இனிய சொற்களையுடையவர் என்று பொருள். சிவபெருமான் பாடிய பாடலிலேயே குற்றம் கண்டுபிடித்து, அவர் தம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியும் “குற்றம் குற்றமே” என்று வாதாடியவர், எதற்காகவும் அஞ்சாதவர். சங்க காலப் பத்துப் பாட்டுகளுள் முதல் பாட்டாக உள்ள ‘திருமுருகாற்றுப்படை’யில் முருகனை பலவாறு துதித்து, ‘உலகம் உவப்ப’ என்று தொடங்கிய பாடலை பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படை முருகனது பெருமையைக் கூறும் மிகச் சிறந்த நூலாகும். இதில் முருகனுக்குரிய தமிழ் பெயர்களான முருகா, குமரா போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. நக்க...

திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!!

Image
திருமூலரும், வாழ்க்கை நெறியை உணர்த்தும் திருமந்திரமும்!! ஆரூர் சுந்தரசேகர்.  திருமூலர் என்கிற திருமூல நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரும் ஆவார்.  திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரம் தமிழுக்கு வரமாக வாய்த்த நூல் மற்றும் தமிழ் சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்...”என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமந்திரத்தில் அழகாக விளக்கியுள்ளார்.  திருமந்திரம் ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் துறைகளை கொண்டது. திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. திருமூலரான சுந்தரநாதர்: சித்தர் மரபில் திருமூலர் தான் முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். இவருடைய இயற்பெயர் சுந்தரநாதன். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் ஏழாயிரம் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் வாழ்ந்த காலம் கி.மு 5000 வருடங்களுக்கு முந்தையது என்றும் சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் ப...

திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர்!! ஆரூர் சுந்தரசேகர்.

Image
திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர்!!  ஆரூர் சுந்தரசேகர். முருகபெருமானின் பெருமைகளை பாடிய அடியார்கள் பலர் இருந்தாலும், முருகனின் அருள் பெற்ற அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத நூல்கள் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் அமைந்துள்ளது, அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ். அருணகிரிநாதர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று, முருகன் திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து, முருகபெருமானின் பெரும் புகழை திருப்புகழாக பாடியவர். இவர் எழுதிய திருப்புகழில் ஆயிரத்து முன்னூற்று ஏழு பாடல்கள் உள்ளன. இது சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது. இவற்றுள் ஆயிரத்து என்பதெட்டுக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. அருணகிரிநாதர் பிறப்பு: கி.பி15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்ததாகவும், இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கூறப்படுகிறது. இவரது சிறுவயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால், இவருடை...

ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!!

Image
ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!! ஆரூர் சுந்தரசேகர். இந்து மதத்தில் நிறைய தெய்வீக நூல்கள் உள்ளன. அதில் ஒரு புகழ்பெற்ற நூல் நாராயணீயம். இது குருவாயூரப்பன் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்திய பக்தி காவியம். இதனை எழுதியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி ஆவார். இந்த நாராயணீயம், ஸ்லோகம் பாராயண பலனாக நமக்கு உடல் நலமும், நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் பார்த்த பரவசத்தில் பட்டத்திரி உறுதியான முடிவுடன் எழுதி இருக்கிறார். நாராயணீயம் இன்றும் ஆயிரக்கணக்கான தென்னிந்திய இந்துக்களின் இல்லங்களில் தினந்தோறும் பக்தியுடன் பாராயணம் செய்யப்படும் நூல் ஆகும். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரம் தான் நாராயணீயம். ஸ்ரீமத் பாகவதம் என்பது வேத வியாசரால் இயற்றப்பட்டு, பின்னர் சுகர் என்ற முனிவரால் பரீக்ஷித் மஹாராஜாவிற்கு உபதேசித்தது ஆகும். இதில் 18000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இதனை மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி 1034 ஸ்லோகங்களுடன் 100 பிரிவுகளில் அதன் கருத்துகள் மற்றும் பொருள் மாறாமல் அழகிய கவிநயத்துடன் சுருக்கமாக அமைத்துள்ளார். ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவர்...

பதினெண் சித்தர்கள் தரிசனம் காண்போம்!!

Image
பதினெண் சித்தர்கள் தரிசனம் காண்போம்!!  ஆரூர்.சுந்தரசேகர். ‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். நமது கோரிக்கைகளை இறைவனை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கள் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் ஆவர். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. நாம் அறிந்தும், அறியாமலும் எப்பொழுதும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் ஆவர். இப்ப...

ஶ்ரீமத்வாச்சாரியாரியாரும்... உடுப்பி கிருஷ்ணர் கோயிலும்... -

Image
ஶ்ரீமத்வாச்சாரியாரியாரும்... உடுப்பி கிருஷ்ணர் கோயிலும்... - ஆரூர்.சுந்தரசேகர். நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு பல தத்துவ விளக்கங்களை கொடுத்துள்ளனர். அத்வைத்திற்கு ஆதிசங்கரரைப் போல், விசிஷ்டாத்வைத்திற்கு ஶ்ரீராமனுஜரைப் போல், த்வைத கொள்கைகளை பரப்புவதற்கு அவதாரம் எடுத்தவர் ஶ்ரீமத்வாச்சாரியாரியார். “மத்வர்” என்ற சொல்லுக்கு “யாராலும் வெல்ல முடியாதவர்” என்ற பொருள் உண்டு. இவர் உடல் பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். ஆஞ்சநேயர், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு பகவான் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். இறைவனிடம் பயபக்தியுடன் இருப்பதும், அனைவரிடமும், அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்துவதும், தன் கடமைகளை பணிவுடன் செய்வதும், வாழ்க்கையில் நற்பணிகள் செய்து அர்ப்பணிப்பதே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று அழைக்கப்பட்டனர். ஶ்ரீமத்வாச்சாரியாரியார் அவதாரம்: கி.பி 1238 விளம்பி ஆண்டு விஜயதசமியன்று கர்நாடக மாகாணத்தில் உடுப்பிக்கு அருகில்...

ஶ்ரீ இராமானுசரின் மூன்று திருமேனிகள்!!

Image
ஶ்ரீ இராமானுசரின் மூன்று திருமேனிகள்!!  ஆரூர். சுந்தரசேகர். ஆதிசங்கரரின் அத்வைதம், மாத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆதிசங்கரர் மற்றும் மாத்வர் இருவர் வாழ்ந்த காலத்திற்கு இடையில் வாழ்ந்த ஶ்ரீஇராமானுஜரால் விசிஷ்டாத்வைதம் உபதேசிக்கப்பட்டது. இராமானுஜர் வைணவத்தின் பெருமைகளை இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பரவச் செய்தார். மற்ற மதத்தாருடன் எதிர்வாதம் புரிந்து அவர்களை வைணவத்திற்கு வழிப்படுத்தினார். பல வைணவ மடங்களை நிறுவினார். சாதி பேதம் பாராமல், வைணவம் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரையும் தமிழ் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும் ஏற்பாடு செய்தார். ஶ்ரீஇராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் இல்லாமல் பெரிய நிர்வாகியாகவும் இருந்தார். ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உருவாக்கினார். ஶ்ரீஇராமானுசரின் அவதாரம்: கி.பி.1017-ல் பிங்கள ஆண்டு வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில்,...

ஜகத்குரு ஆதிசங்கரரும், லட்சுமி கடாக்ஷம் அருளும் கனகதாரா ஸ்தோத்திரமும்.....

Image
ஜகத்குரு ஆதிசங்கரரும், லட்சுமி கடாக்ஷம் அருளும் கனகதாரா ஸ்தோத்திரமும்.....   ஆரூர். சுந்தரசேகர். ஜகத்குரு ஆதிசங்கரர் இந்து தர்மம் தழைக்கச் செய்தவர்களில் ஒருவர். சங்கரன் என்பதற்கு நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்ற பொருளுண்டு. ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார். அத்வைத சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அளவுக்குச் சிறிய மற்றும் பெரிய நூல்களை ஆதிசங்கரர் எழுதியுள்ளார். அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன. ஜகத்குரு ஆதிசங்கரர் அவதாரம்: இன்றைய கேரளா மாநிலத்திலுள்ள இயற்கை செழிப்பான காலடி என்ற கிராமத்தில் பிராமண சமூகத்தை சேர்ந்த சிவகுரு, ஆரியாம்பாள் தம்பதியருக்கு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வைகாசி மாதம் பஞ்சமி தினத்தன்று இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தையாக அவதரித்தார். சங்கரருக்கு நான்கு வயது ஆகும்போது அவரது தகப்பனார் இயற்கை எய்தினார். அவரது தாய் சங்கரருக்கு ஐந்தாம் வயதில் உபநயனம் செய்வித்தார். பூணூல் அணிந்த பின் தகுந்த குருவிடம் வேதம், சாஸ்திரம...