அம்மா... வரமாய் வந்த கடவுள்..
அம்மா... வரமாய் வந்த கடவுள்.. அம்மா! அம்மா!! அம்மா!!! மூன்று எழுத்து கவிதை சொல்ல சொன்னால் நான் அம்மா என்பேன்! தமிழின் உயிர் முதலாகி, மெய் இடையாகி உயிர் மெய் கடை ஆகி வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி “அம்மா”. என்ன ஒரு அருமையான உறவு.. வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. "அம்மா" அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு உயிர் என்றால் அது அம்மாதான்.. ஒவ்வொரு நாளும் நம்மை பற்றி கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள். நிம்மதி தேடிச்செல்லும் நாம் எவ்வளவு பணம் செலவு செய்தலும் கிடைக்காத ஒரு நிம்மதியான இடம் நம் அம்மா இருக்கும் இடம் மட்டும் தான். தவறுகளை சுட்டி காட்டி செம்மைப்படுத்தும் உன் அறிவுரைகள் ஆனால் குற்றங்களையும் மன்னிக்கும் உனது இதயம். நீ அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டுவது ஒரு கலை அதுவே ஒரு கொடை. சோர்ந்து போகும் நேரங்களில் ஊன்றுக்கோலாய் நீ தருவாயே ஊற்சாகம்! வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்...