Posts

Showing posts from March, 2022

திருமணம், மக்கட் பேறு அருளும் பச்சையம்மன்!! ஆரூர் சுந்தரசேகர்.

Image
  திருமணம், மக்கட் பேறு அருளும் பச்சையம்மன்!! ஆரூர் சுந்தரசேகர். இயற்கை என்றவுடன் நம் நினைவுக்க வருவது பச்சை நிறம். பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமை.   திருவண்ணாமலை மாவட்டம் தசெய்யாறு தாலுகாவில் செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் வாழைப்பந்தல் எனும் ஊரை அடுத்த முனுகப்பட்டு எனும் பசுமையான கிராமத்தில் பச்சைநிறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்த நிலையில் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். பச்சை நிறமுடைய இவரை ‘பச்சையம்மன்’ என்றே அழைக்கின்றனர்.  இங்கு அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து தவம் செய்ய, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோயிலாக திகழ்கின்றது. பல இடங்களில் கோயில் கொண்டுள்ள பச்சையம்மனுக்கெல்லாம் வாழைப்பந்தலில் குடி் கொண்டுள்ள பச்சையம்மனே முதன்மையானவர். ஸ்தல புராணம் : ஒரு சமயம், பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரி பாதி (இடபாகம்) பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி காஞ்சியிலிருந்து புறப்பட்டு...

நினைத்ததை நிறைவேற்றித் தரும் பறவைச் சித்தர் “ஸ்ரீசக்கரை அம்மா”!! ஆரூர் சுந்தரசேகர்.

Image
  நினைத்ததை நிறைவேற்றித் தரும் பறவைச் சித்தர் “ஸ்ரீசக்கரை அம்மா”!! ஆரூர் சுந்தரசேகர். பூமியில் எத்தனையோ சித்தர்கள் இம்மண்ணில் அவதரித்து மக்களின் நலன்கள் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற 'சக்கரை அம்மா'   சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் பூஜை செய்துவந்ததால், ஆனந்தாம்பாள் என்ற பெயர் மாறி, சக்கரத்தம்மா, சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்டார். பெயரில் மட்டும் இனிமை கொண்டவர் என்றல்லாது, அன்பில், கருணையில்,பாசத்தில் , நேசத்தில் இனிமை கொண்டவர்.  அஷ்டமா சித்திகளில் உடலை லேசாக்கி வானில் பறக்கும் லகிமா சித்தி அவைகளில் ஒன்று. இவர் தனது அடியவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வானில் பறந்து சென்று உதவி செய்வார் இதனால் இவரை பறவை சித்தர் என்றும் அழைத்தார்கள்.  இவருடைய ஜீவசமாதி சென்னையில் கலாக்ஷேத்ரா மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி அருகில் அமைந்துள்ள...

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில் “ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள்” திருக்கோயில். ஆரூர் சுந்தரசேகர்.

Image
  ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில் “ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள்” திருக்கோயில். ஆரூர் சுந்தரசேகர்.  நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. எவ்வளவோ கோயில்கள் இருந்தும் அதிகம் அறியப்படாத கோயில்கள் பல உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கும் அரசர்கோவிலும் அதில் ஒன்று. இக்கோயில் சுமார் 1500 - 2000 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இப்போது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது . இக்கோயிலில் இராஜ இராஜேஸ்வரிக்கும், மகா காளிக்கும் தாய், தந்தைக்குரிய அம்சத்துடன் ஶ்ரீபெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இருப்பதாக ஐதீகம். இங்கு ஶ்ரீபெருந்தேவி தாயார் மிகவும் விசேஷமானவர். இங்கு தாயாருக்கு ஆசனமாக சக்தி பீடம், சரஸ்வதி பீடம், சிம்ம வாகனம், ஸ்ரீயந்திரம். மஹா லெக்ஷ்மி பீடம் உள்ளது. இதன் மேல் பத்மாசனத்தில் தாயார் வலது காலில் ஆறு விரலுடன் அமர்ந்து இருக்கின்றார். மற்றுமொரு ஒரு அற்புதமான விஷயம், இவர் முழு சந்திர, சூரிய பிரபையோடு இங்கு மட்டும்தான் காட்சி அளிக்கின்றார். இவர் அறுபது லட்சுமிகளையும் அங்க...

நல்ல இல்வாழ்க்கை அமைந்திட செய்யும் திருச்சத்திமுற்றம்!! ஆரூர் சுந்தரசேகர்.

Image
  நல்ல இல்வாழ்க்கை அமைந்திட செய்யும் திருச்சத்திமுற்றம்!! ஆரூர் சுந்தரசேகர்.  எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, மனதார விரும்பியவர்களையும், விதிவசத்தால் பிரிந்தவர்களையும் ஒன்று சேர்ப்பதற்கென்றே ஒரு கோயில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருச்சத்திமுற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். (சக்திவனேஸ்வரர்) இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் பெரியநாயகி அம்மன். இத்திருக்கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்இருபத்திஇரண்டாவது சிவ ஸ்தலமாகும். தேவாரப்பதிகம் “வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை யீங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங்கு யாரறிவார் செம்மை தருசத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே”. -திருநாவுக்கரசர் வள்ளலார் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓவாது சித்தம் உற்ற யோகம் செழும்பொழிலில் பூவை செயும் சத்திமுற்றம் ம...

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில். ஆரூர் சுந்தரசேகர்.

Image
  நினைத்த காரியங்களை நிறைவேற்றும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில்.  ஆரூர் சுந்தரசேகர். சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு ஸ்ரீரங்கம் (வட ஸ்ரீரங்கம்) இருப்பது பலருக்கு தெரியாது. சுமார் 1,000 வருடகாலம் பழமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் மேல் சயன கோலத்தில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார். இவரை தரிசனம் செய்ய இங்கு வரிசை கிடையாது, சிறப்பு கட்டணம் கிடையாது, அருகே நின்று ஸ்ரீ ரங்கநாதரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம்.  இந்த கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில், தேவதானம் என்று ஒரு கிராமத்தில் உள்ளது. தேவதானம் என்ற பெயர் வர காரணம் : இந்திரன் தேவர்களுக்கு பரிசளித்த இடம் இது என்பதால் இவ்விடம் “தேவதானம்” என பெயர்பெற்றது. மற்றும் தேவர்கள் இவ்விடத்தில் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டதால் இவ்விடம் தேவதானம் என பெயர்பெற்றதாகவும் குறிப்புகள் உள்ளன.  ஸ்தல வரலாறு: சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரி ஆற்ற...

நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் அருளும் ஐயங்கார்குளம் ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் ஆரூர் சுந்தரசேகர்.

Image
நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் அருளும் ஐயங்கார்குளம் ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் ஆரூர் சுந்தரசேகர். பக்திக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஐயங்கார்குளத்தில் சிறிய திருவடியான அனுமானுக்கு பழைமை வாய்ந்த அதிகம் அறியப்படாத தனி திருக்கோயிலாக ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வடக்கு திசை பார்த்தவாறு சுயம்புவாகத் தோன்றியவர் சஞ்ஜீவிராய அனுமன். இவருக்கு இங்கும் மட்டும்தான் இவ்வளவு பெரிய தனிக் கோயில் இருக்கிறது. பல கோயில்களில் அனுமனுக்கு உட்புறம் தனிச்சந்நதி இருக்கும். சில தனி ஆலயங்களில் அனுமனே விஸ்வரூபனாக இருப்பதால், அந்த உயரத்துக்கும் மேலே கோபுரம் எழுப்புவது இயலாததாக இருக்கும். ஆனால் இந்த கோயில் மூன்றுநிலை ராஜகோபுரம், மூன்று விமானங்கள், மூன்று பிரகாரத்துடன் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவராக சஞ்ஜீவிராயர் (அனுமன்) வீற்றிருக்கிறார். அவருக்கு எதிரே இராமன் சீதை மற்றும் இலட்சுமணர் உள்ளனர். இந்த கோயில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  திரேதா யுகத்தின் போது, இராமபிரானுக்கும் இராவணனுக்கும் இலங்கையில் நிகழ்ந்த போரில் இராவணனின் புதல்வன...

ஆனந்தத்தை அள்ளி தரும் க்ஷேத்திரபாலபுரம் ஶ்ரீஆனந்த கால பைரவர் கோயில்.

Image
  ஆனந்தத்தை அள்ளி தரும் க்ஷேத்திரபாலபுரம் ஶ்ரீஆனந்த கால பைரவர் கோயில். ஆரூர் சுந்தரசேகர்.  சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவரும், சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவரும் பைரவர் ஆவார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசியில் கால பைரவர் பிரதானமாக வணங்கப்படுகிறார். பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நாய் வாகனத்துடன் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்வார்கள். அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சந்நிதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. சாதாரணமாக அனைத்து பைரவருக்கு பல கோயில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று பழைமை வாய்ந்த தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும...

கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!!

Image
  கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!! ஆரூர் சுந்தரசேகர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை  நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலம்செய்  துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்  சங்கத் தமிழ் மூன்றும் தா .  - ஔவையார் அருளிய விநாயகர் அகவல் கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில்கள் நிறைந்த கும்பகோணத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் குறிப்பிடத்தக்கவர். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுகிறார். இக்கோயில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் வராஹ தீர்த்தக் கரையில் அமர்ந்து கரும்பாயிரம் பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். முன்னொரு காலத்தில் வராஹப் பிள்ளையார் என்றும் இப்போது கரும்பாயிரம் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகின்றார் தற்போது இந்தக் கோயில் புதுப்பொலிவோடு திகழ்கின்றது. கும்பகோணத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இக்கோயிலின் பெருமையையும், அருள் வளமையையும் கேள்வியுற்று தரிசித்துச் செல்கின்றனர். இந்த பிள்ளையார் கோயிலில் ஆகம விதிகளின் படி, வ...

நினைத்தவுடன் அருளும் நரசிங்கபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!! ஆரூர் சுந்தரசேகர்.

Image
நினைத்தவுடன் அருளும் நரசிங்கபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!!  ஆரூர் சுந்தரசேகர்.  சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பழமையான வைணவ ஸ்தலங்களில் அவசியம் தரிசிக்க வேண்டியது திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு லக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில் சுமார் 1400 வருடங்கள் பழமையான கோயிலாகும். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது. இவரிடம் வேண்டிக்கொண்டால், உடனுக்குடன் நிறைவேற்றி விடுவார் என்பது ஐதீகம். எனவே “நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்” என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருத்தமாகும். இக்கோயிலில் மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை இடது தொடை மீது அமரவைத்து, தனது இடது கையால் தாயாரை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்சியளிப்பது சிறப்பாகும். தாயார் மகாலட்சுமி நேரடியாக பக்தர்களையே பார்க்கும் அம்சமாக அமைந்திருப்பது இத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பு. இதனால் இந்த லட்சுமி நரசிம்மருக்கு கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. ஸ்தல வரலாறு: இந்த கோயில் பல்லவர்கள் கால...

வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! ஆரூர் சுந்தரசேகர்.

Image
  வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! ஆரூர் சுந்தரசேகர்.  மூன்று சக்திகள் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான் ஆதி பராசக்தி. இவரையே பரப்பிரம்ம சக்தி, பரம் பொருள் என்றெல்லாம் அழைக்கின்றனர். காலப் பிரம்மம் ஆகிய காலத்தின் சக்தி வடிவம் தான் பார்வதி. அர்த்தப் பிரம்மம் ஆகிய ஒளியின் சக்தி வடிவம் லெக்ஷ்மி. நாதப் பிரம்மம் ஆகிய ஒலியின் சக்தி வடிவம் சரஸ்வதி. இந்த மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த சக்தி வடிவம்தான் லலித்தை என்கின்ற ஆதிபராசக்தி. இந்த முப்பெரும் சக்திகளை தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி வட்டத்தில் உள்ள செல்லப்பிராட்டி என்ற சிற்றூரில் ஶ்ரீ அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்பாளாக அருள் பாலித்து வருகிறார். ரிஷ்ய சிருங்க மகா ரிஷி தமது தவ வலிமையால், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்கிற மூன்று சக்திகளையும் ஒருங்கிணைத்து உலகை காக்கும் அன்னையாகிய லலித்தையின் மூல ஒலிக் கோடுகளை கொண்டு உலகை இயக்...