Posts

Showing posts from June, 2019

விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்...

Image
விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்... ஆரூர் சுந்தரசேகர். விபூதி இந்துக்கள்  நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐஸ்வர்யம் என்று அழைக்கப்படும். "நீறில்லா நெற்றி பாழ்!" என்கிறார் அவ்வையார்.  விபூதிக்கு திருநீறு என்று ஒரு பெயருண்டு. "மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே" திருநீறு இட்டுக் கொள்ளும் பெருமையை திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடியுள்ளார் மேனியெங்கும் பால் வெண்ணீறைப் பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது.   "பூதி அணிவது சாதனம் ஆதியில்   காதணி தாமிர குண்டலம் கண்டிகை   ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்   தீதில் சிவயோகி சாதனம் தேரிலே." என்கிறார் திருமூலர். இப்பாடல் சிவனடியார்கள் அணிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் மூன்று  அதில் திருநீறு முதலாவதும் இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும் உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என கூறியுள்ளார். “பூசுவத...

கோபுர தரிசனம் பாப விமோசனம்...

Image
கோபுர தரிசனம் பாப விமோசனம்... ஆரூர் சுந்தரசேகர். . "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள். "கோபுர தரிசனம் பாப விமோசனம்" என்பது பழமொழி ஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும். கோயில் வாசலில் அமைக்கப்படும் ராஜகோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும் . இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு . இதனை ஸ்தூல லிங்கம் என்பது ஐதீகம் . கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும். கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு.      “நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி………..” கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்று பெரிய புராணத்தில்  கூறப்பட்டுள்ளது. “கோலக் கோபுரக் கோ...

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...

Image
ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்... ஆரூர் சுந்தரசேகர்.    நந்தி பகவானை  வளர்பிறை தேய்பிறை திரயோதசி  திதிகளில்  பிரதோஷம் வேளையில் வழிபடுவது அனைவருக்கும் தெரியும்.   நந்தி என்றாலே ஆனந்தம் என்ற பொருள் உண்டு.   அதற்கேற்ப எல்லோரையும் ஆனந்தமாக வைத்திருப்பார்.     நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.   ' ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...' என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும். “செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம் பவமறுத்த நந்திவானவர்” எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தான் என்பது தெளிவாகின்றது. சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. சிவ...

குங்குமம் என்றும் ஒரு மங்களச் சின்னம்....

Image
குங்குமம் என்றும் ஒரு மங்களச் சின்னம்.... ஆரூர் சுந்தரசேகர்.    பல நூற்றாண்டுகளாய்  சாஸ்திர சம்பிரதாயமாக ஆன்மீகத்தில் முதலிடத்தைப் பெறுவது குங்குமம். ஹிப்நாட்டிஸ சக்தியை முறியடித்து,நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி வைட்டமின் 'டி' போன்ற சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை பயக்குவதும் குங்குமம். அழகு சாதன வரிசையிலும் நெற்றிப் பொட்டில், எந்த  வடிவத்தில் இருந்தாலும், உலக நாகரிகத்திற்கு இந்திய கலாசாரத்தை அடையாளப்படுத்துவதும் குங்குமம் இப்படி  ஆன்மிகம், அறிவியல், அழகு இம் மூன்றிற்கும் உரியது குங்குமம் மட்டும் தான். அன்று முதல் இன்று வரை குங்குமம்:    குங்குமம் பயன்படுத்தும் விதத்தை  லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் சௌந்தர்ய லஹரி உட்பட பல பண்டைய புராணங்கள், மத நூல்கள், வேதங்கள்  மற்றும் கதைகளில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில... "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்"  ...அபிராமி அந்தாதி   ஹனுமான் ஒருமுறை சீதை குங்குமம் இட்டுக் கொள்வதைப் பார்த்து, ஆர்வத்தோடு `தாயே, குங்குமத்தின் பலன் என்...

என்றும் முன் மாதிரியாக..... என் அப்பா

Image
அப்பா... அப்பா உன்னால் வந்தேன் இவ்வுலகிற்கு உன் வயிற்றில்  சுமக்காவிட்டாலும் காலமெல்லாம்  சுமந்தாய்  உன் நெஞ்சினில்.. என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய் நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய் ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த பலன்கள் அனைத்தும் எங்களிடம். தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தான் தந்தையோ! நீங்கள்  மட்டுமே சம்பாதித்த வேளையில் உங்களுடைய மனைவி மற்றும் ஒன்பது  குழந்தைகளின சந்தோசத்திற்காக உங்கள் சந்தோசத்தை இழந்தவர் நீர்! உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம். நான் சோர்ந்து அல்லது தோல்வியில் விழும் பொழுது தோள் கொடுக்கும்தோழன் நீயல்லவா... உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா நலங்களும் தந்தவனே எங்கள் வாழ்க்கை பிரகாசமாய் இருக்க உங்களை மெழுகு போல் உருக்கிகொண்டவர் நீர்! தனக்கென எதையும் சேர்த்து வைக்காமல் எல்லாவற்றையும் எங்களுக்கு என செலவழித்து  சுருக்கமாக சொன்னால் தன்னை உருக்கி - எங்களை உருவாக்கினாய்... ஆக,அவர் கணக்கில் நாங்கள...

நல்லதோர் வீணை செய்வோம்...

Image
நல்லதோர் வீணை செய்வோம்... ஆரூர் சுந்தரசேகர்.         இசைக்கருவிகள் எல்லாம் தனது இசையால் எல்லோரையும் வசீகரிக்கும். வீணையோ தனித்துவமான அழகிய தோற்றத்தாலும், தத்ரூபமான சிற்பங்களாலும்  நமது மனதை இன்னும் அதிகமாக ஈர்க்கும்.     வீணை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் கல்விக்கடவுளான சரஸ்வதிதான். இவர் கச்சபி எனும் வகையைச் சேர்ந்த வீணையைக் கொண்டு இசைக்கிறார். வீணை நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் வெளிபடுத்த முடியும்.             "இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" (திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் 4 ) "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" (திருநாவுக்கரசர். தேவாரம், 5.90.1) இதிலிருந்து வீணை மாணிக்கவாசகர், திருநா...

மங்கலம் அருளும் துளசி

Image
மங்கலம் அருளும் துளசி ஆரூர் சுந்தரசேகர்.         எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில்  முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான். எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால் பல ஆயிரம் அமிர்த கலசங்களால்  அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது. சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும்  தொலையும். துளசி இலையின் மருத்துவ குணங்கள்:   துளசி இலைக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். . துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. துளசியை  தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு...

வைகாசி விசாகம்... தமிழ்க் கடவுள் முருகனுக்கு விசேஷம்...

Image
வைகாசி விசாகம்... தமிழ்க் கடவுள் முருகனுக்கு விசேஷம்... ஆரூர் சுந்தரசேகர். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் தான்  முருகனின்  ஜென்ம நட்சத்திர தினமாகும்.       ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று  முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை  காத்தருள  தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க மகாவிஷ்ணு  ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளை  பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள்  குழந்தைகளை காண  சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்கு   சென்றிருந்த போது பார்வதிதேவி  அங்குள்ள  அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும்  ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்கள் மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே உடலைக் க...