Posts

Showing posts from February, 2019

தீர்க்க சுமங்கலி பவா" என்பதின் மகத்துவம்

Image
தீர்க்க சுமங்கலி பவா" என்பதின்  மகத்துவம் ஆரூர் சுந்தரசேகர். பெண்களை தீர்க்க சுமங்கலி பவா என்று ஆசீர்வதிப்பதை நாம்  பார்த்திருக்கிறோம் அதனுடைய மகத்துவம் என்ன என்பதை  பார்ப்போம்.... தீர்க்க  சுமங்கலி பவா என்ற ஆசீர்வாதத்திற்கு மனைவி கணவனிடம் 5 முறை திருமாங்கல்யம் பெற வேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அவை பின்வருமாறு.... முதலாவது திருமணத்தன்று இரண்டாவது ஷஷ்டியப்தபூர்த்தில் (60 வயது) மூன்றாவது  பீமரத சாந்தியில் (70 வயது) நான்காவது சதாபிஷேகத்தில் (80 வயது) ஐந்தாவது கனகாபிஷேகத்தில் *திருமணம்      முதல் திருமாங்கல்யம்  திருமணத்தின் போது உற்றார் உறவினர் ஆசியுடன் கழுத்தில் ஏறுகிறது. வாழ்க்கையின் முதல் பிணைப்பின் சாட்சியாகிறது மாங்கல்யம். ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. *ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது): சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொர...

சீரடி சாயி பாபாவின் கஃப்னி (நீண்ட அங்கி)

சீரடி சாயி பாபாவின் கஃப்னி (நீண்ட அங்கி)  சீரடி சாய்பாபா அக்காலக்கட்டத்தில் பக்சீர்கள் அணியும் சல்லடைத் துணியை அணிந்து வந்தார். மல்யுத்தம் தெரிந்தவர்களும், மல்ய...

மாசி மகத்துக்கு என்ன சிறப்பு... ஆரூர் சுந்தரசேகர்

Image
மாசி மகத்துக்கு என்ன சிறப்பு... ஆரூர் சுந்தரசேகர்.      மாசி மகம் 2019 பிப்ரவரி மாதம் (செவ்வாய்க்கிழமை) 19.02.2019 அன்று வருகிறது.      மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது.       தென்  இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.      இந்நாளில் தான் பார்வதி தேவி, தட்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.      ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் அன்றுதான்.      பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமா...

ரத சப்தமி - 12 02.2019..... (ஆரூர் சுந்தரசேகர்)

Image
ரத சப்தமி  ஆரூர் சுந்தரசேகர். ரத சப்தமி  தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. கதிரவன் தன் (தட்சிணாயனம்) தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய (உத்தராயணம்)பயணத்தைத் துவங்கும் நாளே 'ரத சப்தமி' ஆகும். ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேரில் பவணி வரும் ஆதவன் அவதரித்த தினம். மகாபாரதப் போரில் அர்ஜுனனால் அம்பால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை.    "என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?”  வேதவியாசரிடம். என்று பீஷ்மர் கேட்டார். “பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது தான் பாபம். அதற்கான தண்டனையிலிருந்து  நீ தப்பமுடியாது.” என்றார்  வியாசர். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், சபை நடுவே பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்...

மஹோதயம்...(04.02.2019)

Image
பிப்ரவரி மஹோதயம்... மகத்துவம்.. ஆரூர் சுந்தரசேகர். மஹோதயம்...(04.02.2019) அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் தினங்கள் புண்ணிய காலங்களாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில நட்சத்திரங்கள், திதிகள், ராசிகள், குறிப்பிட்ட நாட்களில் அமைந்துவிட்டால் அந்த நாட்கள் மிகச் சிறந்த புண்ணியத் திருநாளாக அமைந்துவிடுகின்றன.    வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று எல்லா பஞ்சாங்கத்திலும் "மஹோதயம்" என்று குறிப்பிட்டுள்ளது. மஹோதயம் என்பதின் ஒரு சிறிய விளக்கம். சாதாரணமாக அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள் பல வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும். உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால்  04.02.2019 அன்று  மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம். மாக மாசத்தில் வரும் (குரு அஸ்தமன காலத்தில்) திங்கள்கிழமையும்,(ஞாயிறானால் அர்த்தோதயம்)  ச்ரவணநக்ஷத்ரமும், வ்யதீபாதயோகமும் சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில் ஏற்படுவதாகும். இந்நாள் அலப்யம்—கிடைதற்கறியது எனப்படும். இதுவே சூர்யோதய காலத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும்...

தீராத கடன் பிரச்சனைகள் தீர...

Image
தீராத கடன் பிரச்சனைகள் தீர.... ஆரூர் சுந்தரசேகர்.     தினமும் காலையில் யோக நரசிம்மர் அல்லது லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.    சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திரத்திலும்  பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளசி மாலை சாத்தியும் வழிபடலாம். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்: “ஓம் வ்ஜரநகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்"    கடன் தொல்லைகளுக்கு செவ்வாய் கிரகஹமே காரணம் ஆதலால் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் சன்னதியில் மாலை வேளைகளில் ‘ஓம் சரவணபவாய நம’ என்று சொல்லி கொண்டு 12 முறை பிரதட்சணம் செய்து நெய் தீபமேற்றி வழிபடலாம். முக்கியமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமை அன்று திருப்பிச் செலுத்துவது உகந்தது. முக்கியமாக ...

மகான் திருக்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசிய பெருமாள்..

Image
மகான் திருக்கச்சி நம்பிகளிடம் நேரில் பேசிய பெருமாள்.. ஆரூர் சுந்தரசேகர். மகான் திருக்கச்சி நம்பிகள்  காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தவர். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார். அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்...