Posts

Showing posts from May, 2020

மகான் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர்.

Image
மகான் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர். ஆரூர். சுந்தரசேகர்.    மகான்களும், சித்தர்களும் பெருகித் தழைத்தது நம் பாரதம்.  அவர்கள் அவதரித்து தவசீலர்களாக விளங்கி, மக்களை ஆன்மீக வழியில் நடத்திய மகாபுருஷர்கள் ஆவார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, ஜீவ சமாதியான போதும் அவர்களின் செயல்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், நல்வழி படுத்துவதிலும் இருந்தது. அத்தகைய மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும்  தரிசிப்பது சகல நன்மைகளையும் நமக்கு தரும்.      திருவண்ணாமலை, சித்தர்கள், மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் மகான் என்று கூறுகின்றார்கள். திருவண்ணாமலையின் ஈசான்ய மூலையில் இருந்து மக்களுக்கு அருள் செய்ததால், ஈசான்ய ஞானதேசிகர் என்றும் அழைக்கப்பட்டார். மகான் அவதாரம்:       பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் வாழ்ந்த திருநீலகண்டர்,உமைய பார்வதி தம்பதியினருக்கு இவர் மகனாக 1750ம் ஆண்டில் அண்ணாமலையார் அருளால் அவதரித்தார். இவ...

மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள்.

Image
மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள். ஆரூர். சுந்தரசேகர்.     எத்தனையோ மகான்கள்  நம் பாரத பூமியில் அவதரித்து மக்களின் நலன் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தம்மை நாடி வரும் மக்களின் வல்வினைகளைப் போக்கி நல்வாழ்வு சிறக்க வழிவகை செய்திருக்கின்றனர்.        பல மகான்கள் எங்கெங்கோ அவதரித்து அதிகம் வெளியே தெரியாமலும் இருந்திருக்கிறார்கள். எந்நேரமும் இறை சிந்தனையிலேயே மூழ்கிருந்த அவர்கள் நாளடைவில் ஒரு இறைநிலையை எட்டி அபரிமிதமான இறை சக்தியுடன் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மகான்களின் வரிசையில் ஓர் அதிசய மகானாக தோன்றியவரே மகான் ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்      இவர் மகான் ரமணர்,மகான் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலைக்கு அருகே போளூரில் வாழ்ந்தவர். மகானின் பால பருவம்:     சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மராத்தியர் ஆன கொண்டல்ராவ் லிங்கார் எனப்படும் தையல்கலையை தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி புஸிபாய். இவர்களுக்கு மகான் விட்டோபா மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற...

மகான் நெரூர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள்.

Image
மகான் நெரூர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள். ஆரூர். சுந்தரசேகர்.      மறைந்தும், மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள்.  தான் வேறு, பிரம்மம் வேறு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், தானே அதுவாகவும், அதுவே தானாகவும் மாறி, இந்த உலகில் வாழ்ந்தாலும் அது குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமல் வாழ்ந்து, மறைந்த மகான்கள் எத்தனையோ பேர்.     அவர்களில் ஜீவசமாதியான 'நெரூர் சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள்' இன்றும் சூட்சும வடிவில் நம்மோடு வாழும் அதிசயிக்கத்தக்க மகான். வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து அருள் செய்தவர். ஶ்ரீ காஞ்சிகாமகோடி ஐம்பத்தேழாவது பீடாதிபதி பரமசிவேந்திர ஸரஸ்வதி மற்றும் ஶ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.    இவர் மானஸ ஸஞ்சரரே.. பஜரே ரகுவீரம்.. போன்ற இனிய எளிய அற்புதமான கர்நாடக இசை கீர்த்தனைகளை  இயற்றியவர் ஆவார். மகானின் அவதாரம்:     மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வா...

திருவாரூர் மகான் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்

Image
திருவாரூர் மகான் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர். சுந்தரசேகர்.         இறைவன் பொதுவாக மகான் வடிவில் அவதரித்து நமக்கு அருள் புரிகின்றார் என்பது சான்றோர்களின் அனுபவம். மகான்களின் வாழ்க்கை அனைத்தும் அற்புதங்கள் நிறைந்ததே.             மகான்கள் ஒரு கட்டத்தில் ஜீவசமாதி ஆனாலும் அவர்கள் அரூபமாக எங்கும் வியாபித்து தங்களது அருளை பக்தர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது கண்கண்ட உண்மை.     "திருவாரூரில் பிறக்க முக்தி" என்று புகழப்படும் திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயிலும், கமலாலயத் திருக்குளமும்,    திருவாரூர் தேரழகு என்ற பெருமையும் பெற்ற ஸ்தலமாகும். இதே திருவாரூருக்கு இன்னோரு மகிமையும் இருக்கிறது. அதுதான் மகான் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ள மடாலயம் ஆகும்.    மகான் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்பவர் இளம் பிராயத்திலேயே இறையருளால் ஞானத்தை பெற்று தன்னை நாடி வருபவர்களின் வியாதிகளை குணப்படுத்தியும், விரக்தியடனும் வாழ்ந்தவர்களை மகிழ்ச்சியுடன் வாழ அருளியுள்ளார்...

மகான் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள்.

Image
மகான் ஸ்ரீ படே சாஹிப்  சுவாமிகள். ஆரூர். சுந்தரசேகர்.    நமது நாட்டில் எத்தனை எத்தனை மகான்கள். இந்த புனித பூமியில் அவர்கள் அவதரிக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மகான்களின் வாழ்க்கை அனைத்தும் அற்புதங்கள் நிறைந்தது.   உலகின் அருள் இயக்கம் அனைத்தும் மகான்களின் செயலால் நிகழ்ந்தமையால் ஆண்டவனும் அருள் நிரம்பிய மகானும் ஒன்றே என கருதப்படுகிறது.    ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சம்பிரதாயம் மகான்களை கட்டுப்படுத்தாது. அதோடு ஒரு மகான் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மகான் நிலையை அடைந்த பின்பு அவர் தனிப்பட்ட ஒரு மதத்தை சார்ந்தவர் என்ற நிலையைக் கடந்து ஒவ்வொரு ஜீவனுள்ளும் கடவுளை, அதாவது ஆத்மாவைக் காணும் நிலையை அடைகிறார்.      மகான்  ஸ்ரீ படே சாஹிப்  சுவாமிகள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவர...