Posts

Showing posts from March, 2020

மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள்

Image
மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள் ஆரூர். சுந்தரசேகர்.      மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; மகான்களின் வாழ்க்கை எல்லாம் அற்புதங்கள் நிறைந்தது. பூமியில் பிறப்பவர்கள் மனிதர்களாக இருந்தால் ஒரே முறை தான் இறந்து போவார்கள். அதுபோல, மகான்களாக இருந்தாலும் ஒரே முறைதான் சமாதி அடைவார்கள் .     மகான்களுக்குள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள். ஒவ்வொரு முறை சமாதி அடைந்த பிறகும் மற்றொரு இடத்தில் தோன்றி அற்புதங்கள் புரிந்தவர்.    இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்து விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை அடைந்தார். இவர் சுமார் 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர். மதுரை மீனாட்சி அம்மன் வளர்த்த மகான்:    மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கி...

மகான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

Image
மகான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார். ஆரூர் சுந்தரசேகர். "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”     ஆயிரக்கணக்கானோர் பசியை போக்கிட  அன்ன தானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என்று போற்றப்பட்டார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்.  ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.     அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும்.  கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார்.    எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.  இராமலிங்கனார் பிறப்பு :      கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள  மருதூரில் கிராம கர்ணமாகவும், குழந்தைகளுக்குப் ப...

மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

Image
மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஆரூர் சுந்தரசேகர்.    ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே என்று சொல்லலாம். பல இடங்களில் உற்பத்தியான ஆறுகள் ஒரே கடலில் வந்து சேருவது போல, சமய மார்க்கங்கள் அனைத்தும் ஒரே இறைவனை அடையும் வழிகள் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் கடைப்பிடிக்க  வழிகாட்டிய மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.    எந்த சமய ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமலும், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமலும், எல்லா சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.    மகான் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. மிக கடினமான வேத,  உபநிஷத்து கருத்துக்களை கூட அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறிய கதைகள் மூலம் சொன்னவர். காளி கோயிலின் பூசாரியான பரமஹம்சர்:   ‘ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் கதாதர் சட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ...

அறியாமை இருளை போக்கும் மகான் ஶ்ரீ ரமண மகரிஷி.

Image
அறியாமை இருளை போக்கும் மகான் ஶ்ரீ ரமண மகரிஷி. ஆரூர் சுந்தரசேகர்.       திருவண்ணாமலை திருத்தலத்தில் வந்து தங்கி இறையருள் பெற்ற ஞானியர் பலர். அவர்களுள் “மகான் ஸ்ரீ ரமண மகரிஷியும்” ஒருவர். மகான் ரமண மகரிஷி எளிமையான, காவி உடுத்தாத சந்நியாசியாய் இறுதிவரை வாழ்ந்தார். ரமணரின் உபதேசங்கள் மிகவும் எளிமையானதும் வலிமையாதுமாகும்.. இவர் மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,இக்கட்டான நிலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று தனக்கே உரித்தான கனிவான வார்த்தைகளால் போதித்தவர்.     நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்'' என்று நல்ல நட்பின் வழியாக அறியாமை இருளை போக்கச் சொன்ன அற்புத மகான் ரமண மகரிஷி. ரமணர் தனது ஆற்றலை வெளிப்படையாக யாருக்கும் காட்டுவதில்லை. மௌனமே அவரது பேச்சு மற்றும் ஆசீர்வாதம் ஆகும். ’நான் யார்’ எனும் தத்துவ விசாரமே ஸ்ரீரமணரின் கொள்கை. தத்துவம் மற்றும் அருள்மொழி ஆகும். திருவண்ணாமலை வந்தார் மகான் ரமண மகரிஷி:     மதுரைக்கு அருகில் உள்ள அருப்புகோட்டையில் இருந்து உள்ளே செல்லும் திருச்சுழி எனும் கிர...

மகான் ஶ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

Image
மகான் ஶ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆரூர் சுந்தரசேகர்.     சென்னையில் எண்ணற்ற மகான்கள் வாழ்ந்து, சென்னைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களில் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் என்று அழைக்கப்படும் பாம்பன் ஸ்வாமிகளை அறியாதவர்களே இருக்க முடியாது. எளிமையாக வாழ்ந்து, எண்ணற்ற பக்தர்களை தன் அருளால் ஆட்கொண்டவர். முருகப் பெருமானை தன் வாழ்நாளில் பல முறை தரிசிக்கும் பேறு பெற்றவர். சென்னை திருவான்மியூரில் இவர் சமாதி இருந்தாலும், இவருக்கு நாட்டின் பல இடங்களிலும் திருக்கோயில்கள் உள்ளன. இன்றும் வெளிநாடுகளில் உள்ள இவரது பக்தர்கள், விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். பாம்பன் சுவாமிகளை நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களை இன்றும் அவர் அருள்பாலித்து வருகிறார்.     பாம்பன் ஸ்வாமிகள் பாடிய பாடல்கள் ஏராளம். ஸ்வாமிகளது வழிபாடு எங்கே நடந்தாலும் அவரது  பிரபலமான குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் முதலான பாடல்கள் பாடப்படும்.  “உபய அருணகிரிநாதர்”       பாம்பன் சுவாமிகள் 1848 ஆம் ஆண்டு சாத்தப்பப் பிள்ளை,  செங்கமலம் தம்பதியருக்கு மகனாக இர...