Posts

Showing posts from January, 2020

தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்...

Image
தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்... ஆரூர் சுந்தரசேகர்.     “தை பொறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம். இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தைமாதம் கொண்டாடப்படுவதால்' தைத் திருநாள்' என்றும் அழைக்கிறோம். தமிழர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களால் குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் என்பதை வெறும் பண்டிகையாக மட்டும் பார்ப்பதில்லை. தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும், உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள வழிவகை செய்யும் பெருவிழாவாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கலை மட்டும் ஊருடனும், உறவுகளுடனும் இணைந்து கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர். தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, வட மாநிலங்களில் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காரணத்தால் இந்தியாவின் ப...

திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசி... சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்... மகிமை அறிந்துகொள்வோம்!!

Image
திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசி... சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்... மகிமை அறிந்துகொள்வோம்!! ஆரூர் சுந்தரசேகர்.    தட்சிணாயன காலத்தின் கடைசி மாதமான மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். இந்த நாளில் அதிகாலைப் பொழுதில் இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  `மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி'  விரதமாக மக்கள் அனுஷ்டிக்கிறார்கள்.    வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசியைப் போல் சைவர்களுக்கு மார்கழி மாதம் பௌர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுவது  ஆருத்ரா தரிசனம் ஆகும்.    வைணவர்கள் திருப்பாவை பாடல்களைப் பாடி பெருமாளை வணங்கி அருளைப் பெறுவது போல், சைவர்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி சிவனின் அருளைப் பெறுகின்றனர்.     பொதுவாக திருவாதிரை நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம். ஆனால் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமானது சிவனுக்கு உகந்தது என்பதால் சிவன் பெருமாள் ஆகிய இருவரின் சக்தி பெற்ற நாளாக விளங்குகிறது மார்கழி மா...

சுந்தரருக்காக யாசகம் கேட்டு விருந்திட்ட திருக்கச்சூர் ஈசன்!!

Image
சுந்தரருக்காக யாசகம் கேட்டு விருந்திட்ட திருக்கச்சூர் ஈசன்!! ஆரூர் சுந்தரசேகர்.       சுந்தரர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவராக, அறுபத்து மூன்று நாயன்மார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர்ஆவார்.   சுந்தரருக்கு சிறப்பு ஒன்று உண்டு.  அதாவது, சிவபெருமானையே தன் தோழனாகக் கொண்டவர்.         சுந்தரர் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.    இவர்  சிவபெருமானை பற்றி பல ஸ்தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார்.          சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி யாசகம் வாங்கி சுந்தரரின் பசியைப் போக்கிய ஸ்தலம் திருக்கச்சூர்.     ஞானப்பசியை மட்டுமின்றி வயிற்றுப் பசியையும் போக்குகிறவர் சிவபெருமான்....

அனுமன் ஜெயந்தி பற்றி தெரிந்துகொள்வோமா...

Image
அனுமன் ஜெயந்தி பற்றி தெரிந்துகொள்வோமா... ஆரூர் சுந்தரசேகர்.      அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தையும் அனுமன் ஒன்றாக அமையப்பெற்றவர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ என்ற ஆசி பெற்றவர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர்.   தமிழ்நாடு, கேரளா, போன்ற தென் மாநிலங்களில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று   அனுமன் ஜெயந்தியாக அனைத்து அனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.       “இராமா” என   சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். இவர் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதும் நம்பிக்கையாகும். அனுமன் பெயர் காரணம்:     சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாட...

மார்கழி மாதத்திற்கு என்ன மகிமை...

Image
மார்கழி மாதத்திற்கு என்ன மகிமை... ஆரூர் சுந்தரசேகர்.      தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.     ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோயில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோயிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோயிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். எல்லா கஷ்டங்களும் நீங்கி, தை மாதத்திலிருந்து இருந்து புது வாழ்வு கிடைக்க இம்மாதத்தில் பிராத்தனை செய்யப்படுகிறது. “பீடு” (பெருமைகள்) நிறைந்த மாதம் என்பது மருவி “பீடை” மாதம் என ஆனது.    ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளியுள்ளார்.      மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபடுவதால் இம்மாதத்தில் எவ்வித குடும்ப மங்கள விழாக்கள் நடத்தப்படுவதில்லை.    இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். மார்கழி மாதத்தில் நடந்த புராண சிறப்புகள்:     மார்க...