Posts

Showing posts from November, 2019

நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்...

Image
நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்... ஆரூர் சுந்தரசேகர்.       மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறது.             நவகிரகங்களாகிய சூரியன்,சந்திரன்,  செவ்வாய்,  புதன்,  குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள் மனித இனத்துடனும் பூமியுடனும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை.  இவைகளை நாம் நவகிரகங்கள் அல்லது நவ கோள்கள் என்று கூறுகிறோம். (நவ என்றால் ஒன்பது என்று பொருள்). மனித வாழ்வில் பெரும் பங்கு பெறுவது இந்த நவ கிரகங்கள். கிரகங்கள் விண்ணில் இருந்து தனக்கென குறிப்பிடப்பட்டுள்ள பாதையில் காலம் தவறாமல் சஞ்சரிக்கின்றன. இவைகளின் சஞ்சாரத்தால் சீதோஷ்ண நிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த சீதோஷ்ண மாறுதல்களினால் பருவ நிலை மாற்றங்கள் உண்டாகின்றன.    நவக்கிரகங்களின் தன்மைகளும், காயத்ரியும்: கிரகம் 1: சூரியன் (ஞாயிறு)        நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. அக்னி இவருக்கு அதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம்...

சோறு கண்ட இடம் சொர்க்கம்.... அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொள்வோம்....

Image
சோறு கண்ட இடம் சொர்க்கம்.... அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொள்வோம்.... ஆரூர் சுந்தரசேகர்.     உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை அன்னம்தான். உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான உணவையும் படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று        எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.              சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பதால்  பல பொருட்களைக் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.செய்யப்படும் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று சுத்த அன்னத்தால் ( அரிசி சாதம் ) சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது  மிகச் சிறப்பாகும்.        அன்னாபிஷேகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்கமாகக் கருதப்படுவதால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்வது என்பது கோடி லிங்கங்களை தரிசனம் செய்த பலன் கிட்டும்.      ’சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது பழமொழி. அதாவது இந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பவ...

ஸ்கந்த சஷ்டி விரதம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Image
ஸ்கந்த சஷ்டி விரதம் பற்றி தெரிந்துகொள்வோம்!! ஆரூர் சுந்தரசேகர்.                விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகைகள் உள்ளன.        செவ்வாய்,  வெள்ளி, சனி போன்ற நாட்களில் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும்.        மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதமாகும்.        மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது.  ஸ்கந்த சஷ்டி விரதம் பற்றி தெரிந்துக்கொள்வோம்.... “பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!” கந்தப் பெருமான் சூரனை சம்ஹாரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரதமாகும்.         'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்ன...

இருளை நீக்கி ஒளியைப் தரும் தீபாவளி...

Image
இருளை நீக்கி ஒளியைப் தரும் தீபாவளி... ஆரூர் சுந்தரசேகர்.       தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகும்.       இந்தியா மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். தீபம் + ஆவளி =தீபாவளி   “தீபம்” என்றால் ஒளி , விளக்கு . “ஆவளி” என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். புராணங்கள் கூறும் தீபாவளி:      இராவணனை அழித்து விட்டு  சீதாதேவியை மீட்ட இராமர் தமது பதி...