Posts

Showing posts from September, 2019

நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!!

Image
நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!! ஆரூர். சுந்தரசேகர்.     சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல் வாழ்வையும் அருளச்  செய்யும்  சக்தியை வழிபடும் காலமாக நவராத்திரி அமைந்துள்ளது.    நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள். நவராத்திரி வந்தது எப்படி:     ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க வேண்டும் என்ற, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் முடிவு செய்து ஒரு அற்புதமான பெண் உருவத்தை சிருஷ்டித்தார்கள். அந்த பெண் தெய்வமான துர்க்கை, ஆக்ரோஷமான முகத்த...

குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு..

Image
குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு.. ஆரூர் சுந்தரசேகர்.         “நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்” என்பார்கள்.        குலதெய்வ வழிபாட்டை  ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறவர்களுக்கு கிரகங்களால் எந்த கெடுதலும் வராது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உண்டு.                   ஒவ்வொருவருக்கும் குலதெய்வங்கள் மாறலாம் ஆனால்  சக்தி எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். இலக்கியத்தில் குலதெய்வ வழிபாடு: குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது.  ஒரு தெய்வத்தை அவர்களது முன்னோர் பின்பற்றி வழிவழியாக வணங்கி வருதல் ஆகும்.        குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.        தொல்காப்பியத்தில் நடுகல் நடும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே குல தெய்வ வழிபாடு பழங்காலம் தொ...

பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்...

Image
பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்... ஆரூர் சுந்தசேகர்.          திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். மகாவிஷ்ணுவின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று அழைப்பார்கள்        எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே கைக்கூப்பி நின்றுகொண்டிருக்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கிறோம்.          பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும் என்பது ஐதீகம். கருடனுக்கு வேறு பெயர்கள்:    கருடன் என்று போற்றப்படும் பறவையை ராஜபட்சி- பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை.       கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோத...

சிறப்புமிகு சீமந்தம்-வளைகாப்பு !! ஆரூர் சுந்தரசேகர்.

Image
சிறப்புமிகு சீமந்தம்-வளைகாப்பு !! ஆரூர் சுந்தரசேகர்.          நமது பெரியோர்கள் வாழ்ந்து கடைப்பிடித்த சீமந்தம்-வளைகாப்பு  போன்ற  சம்பிரதாயங்களை நாம் இன்றும் கொண்டாடுகிறோம்.         நம் முன்னோர்கள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 41 சடங்குகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.  அவற்றில் ஒன்றுதான் சீமந்தம்-வளைகாப்பு ,இம்மாதிரியான சடங்குகள் நமக்கு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது.  சீமந்தம்-வளைகாப்பு என்பது சுகப்பிரசவம் ஆகவும், குழந்தை பூரண நலத்துடன் இந்தப் பூமியில் பிறக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.       முதலில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் வளைகாப்பு, சீமந்தம், பும்ஸவனம் என்ற இந்த மூன்றும் வெவ்வேறானவை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பும்ஸவனம்:  பும்ஸவனம் என்பது முதலில் ஆண் வாரிசு பிறக்க வேண்டிச் செய்யும்  ஒரு சடங்காகும்.  இதை கர்ப்பம் தரித்த 2வது,3வது அல்லது 4வது மாதத்திற்குள்ளாக செய்யவேண்டும். இந்தச் சடங்கின்போது ஆண் குழந்தை வ...

வாழ்வை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Image
வாழ்வை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு... ஆரூர் சுந்தரசேகர்.           இந்து மக்களின் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி     அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு     கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள்   வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுகின்றது.         இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. விநாயகரை பற்றி புராணங்கள்:        ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகர், யானை முகமும், ...