Posts

Showing posts from May, 2019

அன்னையர் தினத்தை நாம் தினந்தோறும் கொண்டாடுவோம்...

Image
அன்னையர் தினத்தை நாம்  தினந்தோறும்   கொண்டாடுவோம்... ஆரூர் சுந்தரசேகர். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பது பழமொழி. தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள்.   கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதை  உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா'  என்ற தமிழ் சொல். வேறு எந்த மொழியிலும் இதை போன்ற வார்த்தைகள் இல்லை. ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு  ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது.. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகில் ஒருவருக்கு விலை உயர்ந்ததாகத் தோன்றும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும். அதற்கு அவரவர் எண்ணங்களும் வாழும் சூழ்நிலையே காரணமாக இருக்கலாம் ஆனால் எல்லோரும்  ஏற்றுக் கொள்ளும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் “அம்மாவின் அன்பு” இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உ...

தங்க நகை வாங்குவது மட்டும்தானா அட்சய திருதியை....

Image
தங்க நகை வாங்குவது மட்டும்தானா அட்சய திருதியை.... ஆரூர் சுந்தரசேகர்.     சமீப காலமாக  அட்சய திருதியை என்றாலே தங்க நகைகள்    வாங்குவது தான்  என்று   அனைத்து மக்கள் மனதிலும் பதிந்து விட்டது.      "அட்சயா" என்றால் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்று பொருள், மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் நாளாகும்.       ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை 'அட்சயதிரிதியை’ திருநாளாக நாம்  கொண்டாடுகின்றோம். அக்ஷய திரிதியையை  சத்தீஸ்கரில்‘அக்தி’ என்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ‘அக்த தீஜ்’ எனவும் கொண்டாடுகிறார்கள். வங்காளத்தில், அட்சய திருதியை  "அல்கதா" எனும் விழாவாக  கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகம்  எழுதத் தொடங்கும் நாளாகும். இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். அட்சய திருதியை பற்றிய புராணத்தில் கூறும்  ப...

அக்னி நட்சத்திரமும்...அபூர்வ தகவல்களும்...

Image
அக்னி நட்சத்திரமும்...அபூர்வ தகவல்களும்... ஆரூர் சுந்தரசேகர். முன்னோர்களின் வானியல் கணக்கின்படியும், ஜோதிட முறைப்படியும்  பூமத்திய ரேகைக்கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம், புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும். அக்னி நட்சத்திரத்தில்  முதல் ஏழு தினங்களில் மெதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்   அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் வெப்பம் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக  வெயிலின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம். புராணத்தில் அக்னி நட்சத்திரம் : கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிபதி  அக்னி பகவான். அக்னி தேவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் என்றும், சூரியனின் கதிர்களிலிருந்து பிறப்பெடுத்தவன் என்றும் பதினெண் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.  மகாபாரதத்தில் அக்னி தேவனின் பசியைப் போக்க பகவான் கிருஷ்ணரும், அர்ஜூனனும் யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தை எரித்துண்ண உதவிய அந்த 21 நாட...

சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ன விசேஷம்...

Image
சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ன விசேஷம்... ஆரூர் சுந்தரசேகர்.    தமிழ் மக்கள்  ஒவ்வொரு  மாதமும் வரும் பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாக கருதுகின்றனர். சித்திரை   மாதத்தில்  வரும் பெளர்ணமியை சித்ரா பௌர்ணமி என்று கொண்டாடுகிறார்கள்.   சித்ரா பௌர்ணமி அன்று எல்லா   கோயில்களிலும் ‌சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தினம் சிறப்பு அபிஷேக,ஆராதனை  செய்யப்படுகிறது.   சி‌த்ரா பௌர்ணமி அ‌ன்று வரண்ட  ஆ‌ற்றில் ஊற்று தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவூற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டி, அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.    இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் பாடி, மகிழ்ந்து உண்பதும்  தொன்று   தொட்டு வரும்   வழக்கமாகும். வெயிலின் தாக்கத்தை   சமாளிக்க இ...