Posts

Showing posts from September, 2020

சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!!

Image
சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!! - ஆரூர். சுந்தரசேகர். தமிழகத்தின் தென் பகுதியில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை தமிழகத்தின் மத்திய பகுதியில் சுவாமி மலை, தமிழகத்தின் வட பகுதியில் திருத்தணி என்பன முருகனின் ஆறுபடை வீடுகளாகப் புகழப் பெறுகின்றன. இவற்றில் திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிட்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அநாகதம், திருத்தணி - விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை என உடற் சக்கரங்கங்களை குறிப்பதாக ஐதீகம். முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு. சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் ஆறு. ‘முருகா’ என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும். திருப்பரங்குன்றம்... இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனை வழிபட்டால் திருமணம் நடைபெறும். திருச்செந்தூர்... சூரபத்மனைப் போரில் வென்ற இடமாகும். நாழிக்கிணறு ...

சென்னையில் திரிசக்தி தரிசனம்!!!

Image
சென்னையில் திரிசக்தி தரிசனம்!!! - ஆரூர். சுந்தரசேகர். பராசக்தியிலிருந்து ஆதிசக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்திகளும் தோன்றி உலகை உருவாக்கி, இயக்கி இறுதியில் வீடு பேறு அருள்புரிவதாக தேவிபாகவதம் கூறுகிறது. இச்சா சக்தி - விருப்பங்களை நிறைவேற்றுபவர், சௌந்தர்யத்தின் வாழ்விடம், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சௌபாக்கியங்களை தருபவர்... ஞான சக்தி - அறிவு, சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவர், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவர். கிரியா சக்தி - வாழ்க்கை வளம்பெற செய்பவர், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவர், செல்வம், புகழ் தந்து சுகமான வாழ்வருளுவர். இந்த மூன்று சக்திகளுக்கான கோயில்கள் சென்னையில் மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய ஸ்தலங்களில் முக்கோண புள்ளிப்போல அமைந்துள்ளன. மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டதால் இந்த மூன்று கோயில்களில் அம்மன்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது. மூன்று சக்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நாளில், குறிப்பாக ஒரு பௌர்ணமியில், முடிந்தால் ஒரு வெள்ளிக்கிழமை வரும் ஒரு பௌர்ணமியில் தரிசனம் பெறு...

சென்னை திருநீர்மலையில் நான்கு திருக்கோலத்தில் பெருமாள் தரிசனம்!!

Image
சென்னை திருநீர்மலையில் நான்கு திருக்கோலத்தில் பெருமாள் தரிசனம்!! ஆரூர்.சுந்தரசேகர். மகாவிஷ்ணு திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே நரசிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை சென்னையில் பல்லாவரம் அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் ஓரே இடத்தில் காணலாம். இங்கு நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் சாந்த நரசிம்மர், கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமாள், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாக (த்ரிவிக்ரமன்) அருள் புரிகின்றார். திருநீர்மலையில் உள்ள பெருமாளை தரிசித்தால், நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருக்குடந்தை , திருக்கோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்து பூதத்தாழ்வாரும், இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். “ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்” என தானாக தோன்றிய...