Posts

Showing posts from February, 2020

தைப்பூசத்திருநாள்...

Image
தைப்பூசத் திருநாள் ஆரூர் சுந்தரசேகர்.     இருபத்தேழு நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய புண்ணிய நாள் தைப்பூசத் திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.தைப்பூசத்தன்று முருக பக்தர்கள்,   ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து  பாதயாத்திரையாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.      "'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடியுள்ளார்.  "மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான் நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும...

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில்

Image
உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில்... ஆரூர் சுந்தரசேகர்.            தஞ்சைப் பெரிய கோயில் தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவ ஸ்தலமும், இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில்  ஒன்றாகும். சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவ பெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் தஞ்சையில் கி.பி 1010இல் கட்டிமுடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோயில்.    இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம்  பெருவுடையார் கோயில். பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம். கருவூர் சித்தர் அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கும் சந்நிதி அமைத்துள்ளது.    தஞ்சை பெரிய கோயில் தென் இந்திய வரலாற்றில் தலை சிறந்த சின்னமாகும்.கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய...

மகான் தங்கக்கை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.

Image
மகான் தங்கக்கை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.  ஆரூர் சுந்தரசேகர்.     நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்றவுடன்  கார்த்திகை தீபமும்,  அருணகிரிநாதரும் நினைவுக்கு வரும், அடுத்து எல்லோரும் மனதிலும்  நிலைத்து இருப்பது மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.     ஆதிசங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சி அம்மனை முறைப்படி வழிபாடு செய்ய சில பக்தர்களை ஏற்பாடு செய்தார். அனைத்து வேத சாஸ்திரங்களில் அறிந்த இவர்கள்  காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன்-மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வழூர் கிராமத்தில் சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். இவரது இயற்பெயர்  சேஷாத்ரி காமகோடி சாஸ்திரி.  குழந்தை  சேஷாத்ரிக்கு தங்கக்கை பெயர் வர  காரணம்:        சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாக இருந்த போது தனது அன்னையுடன் வைகாசி  உற்சவ நேரத்தில்  காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு   செல்லும் வழியில் ப...

மஞ்சளின் மகத்துவம் அறிவோம்..

Image
மஞ்சளின் மகத்துவம் அறிவோம்... ஆரூர் சுந்தரசேகர்.         மஞ்சள் நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஞ்சள் உணவில் சுவை கூட்டவும், மற்றும் நிறத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு சித்தர்கள் சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக இதைப் பயன்படுத்தியுள்ளார்கள். மஞ்சள் என்பது மிகப்பெரிய கிருமிநாசினி. அதனால் தான் அது ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும். எல்லா சுபகாரியங்களிலும் முதலில்  முழுமுதற் கடவுளாக வணங்கப்பெறும் விநாயகப் பெருமானை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிக்கிறோம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்" பூசப்படுகிற...