Posts

Showing posts from October, 2019

பயத்தை போக்கும் பைரவர் வழிபாடு !!

Image
பயத்தை போக்கும்  பைரவர் வழிபாடு !!  ஆரூர். சுந்தரசேகர்.         பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவம் பைரவர் வடிவமாகும். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.         ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.                காலையில் கோயில் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று “பார்த்த நித்ய பூஜா விதி” கூறுகிறது.  கோயிலின் மற்ற சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதங்களில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பற்ற இந்நாளில் சில கோவ...

சுந்தர காண்டம் பாராயணம் அள்ளித் தரும் பலன்கள்!!

Image
சுந்தர காண்டம் பாராயணம் அள்ளித் தரும் பலன்கள்!! ஆரூர் சுந்தரசேகர்.     சுந்தர காண்டம் என்பது வால்மீகி இராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் ஆகும். இதில் உள்ளது அனைத்தும் சுந்தரமான விஷயங்கள். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்குகிறது.      இராமாயணத்தில் சுந்தரகாண்டமே மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்ததுள்ளது. சீதாதேவியை பிரிந்த துக்கம் தாளாமல் நம்பிக்கை இழந்து செய்வதறியாது ஸ்ரீராமன் இருந்த போது, அனுமன் சீதாதேவியிடமிருந்து கொண்டு வந்து கொடுத்த கணையாழி  ஸ்ரீராமனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கே அனுமனின் வலிமை நம்பிக்கை தந்தது என்றால், இதை நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்களுக்கு  ஸ்ரீராமனின் அருளோடு கூடிய அனுமனின் கடாக்ஷம் கிட்டும் அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது. ஸுந்தரே ஸுந்தரோ ராம: ஸுந்தரே ஸுந்தரி கதா ஸுந்தரே ஸுந்தரி ஸீதா ஸுந்தரே ஸுந்தரம் வநம் ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம் ஸுந்தரே ஸுந்தரோ கபி: ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம் ஸுந்தரே கிம் ந ஸுந்தரம் அழகான சுந்தர காண்டத...

ஞானகுரு தட்சிணாமூர்த்தியும், நவக்கிரக குருபகவானும்...

Image
ஞானகுரு தட்சிணாமூர்த்தியும், நவக்கிரக குருபகவானும்... ஆரூர்.சுந்தரசேகர்.    ஸனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் குருவாக சிவபெருமானே தட்சிணாமூர்த்தியின் வடிவு எடுத்து கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து காட்சியளிக்கிறார். இவரை ஆதிகுரு என்றும் ஞானகுரு என்றும் அழைக்கப்படுகிறார்.     நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு முன்ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர். ஞான குரு, நவக்கிரக குரு என்ன வித்தியாசம்:       ஒரு சிலர் தட்சிணாமூர்த்தி, குருபகவானும் ஒன்றே என்று கூறி வருகிறார்கள், ஆனால் நவக்கிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவான் வேறு. தட்சிணாமூர்த்தி வேறு, இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்.     தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். ஞானத்தின் வடிவாக இருக்கும் அவரை வழிபட்டால் அறிவும், தெளிவும், ஞானமும் பிறக்கும் என்பது நம்பிக்கை.   நவகிரகங்களில் உள்ள குரு பகவானின் திசை வடக்கு. அதே நேரத்தில் குருபகவான் என்ப...