Posts

Showing posts from April, 2020

வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.

Image
வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.  ஆரூர். சுந்தரசேகர்.     எண்ணிலடங்கா இறை உணர்ந்த மகான்கள், இன்றும் தம் ஜீவசமாதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜீவசமாதியின் முன் நின்று வணங்கினால் அவர்களின் அருளாசினையை பெற்றிடலாம்.     இருநூறு ஆண்டுக்கு முன், அப்போது, 'வேதஸ்ரேணி' என்றழைக்கப்பட்டு, தற்போது, வேளச்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள, தண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து “சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண்” என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு உணர்த்திய மகான்,  “வேளச்சேரி மகான்” என்றும் “சிதம்பர பெரிய சுவாமிகள்” என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். “வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி” வந்த சிதம்பர பெரிய சுவாமிகள்:     திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி என்ற பணக்கார தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் சிதம்பர பெரிய சுவாமி, இவரது இயற்பெயர் வீராசாமி என்பதாகும். தனது ஏழாம் வயதில் பெற்றோரை விட்டு விலகி, துறவறம் மேற்கொண்டு தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செ...

ஸ்ரீ பூண்டி மகான் ஸ்வாமிகள்

Image
ஶ்ரீ பூண்டி மகான் சுவாமிகள் ஆரூர் சுந்தரசேகர்.     திருவண்ணாமலை என்றவுடன் மகான் சேஷாத்ரி சுவாமிகள்,  மகான் ரமண மஹரிஷி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலமான   திருவண்ணாமலை அருகே போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கத்தில் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்தவர் ஶ்ரீ பூண்டி மகான்.      நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து ஜீவசமாதியான ஶ்ரீ பூண்டி ஆற்று ஸ்வாமிகளைப் பற்றி அதிகம் பேர் அறிந்ததில்லை.    திருவண்ணாமலை  மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ஶ்ரீ பூண்டி மகான் ஆவார். இவரின் அன்பும் தீட்சண்ய பார்வையும் இவரை மகான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவர் செய்த பல அற்புதங்கள் பற்றிய தகவல்கள், போளூர் ,கலசப்பாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது. நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும்  இந்த மகானை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள்.    ...