Posts

Showing posts from April, 2019

விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு தருக....

Image
விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு  தருக.... ஆரூர் சுந்தரசேகர். விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு (விகாரி) நல்வாழ்த்துக்கள்.   இந்த தமிழ் புத்தாண்டில்   மும்மாரி மழை பொழிந்து நாடு செழித்து  வளம் பெருக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்வோம். விளம்பி ஆண்டு நிறைவு பெற்று மங்களரகமான விகாரி வருடம், உத்தராயண புண்ணிய காலம்  ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 07 நிமிடத்துக்கு, 14/04/2019 அன்று பிறக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு  என்பது  தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள  கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும்  ஒடிசா மக்கள் மகா விஷுபா சங்கராந்தி என்றும்  கொண்டாடுகிறார்கள். இவர்களோடு மணிப்பூர், திர...

ஸ்ரீராம நவமி... தெரிந்து கொள்வோம்.

Image
ஸ்ரீராம நவமி... தெரிந்து கொள்வோம். ஆரூர் சுந்தரசேகர். மகா விஷ்ணு எடுத்த பத்து  அவதாரங்கள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று  புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதில் ஏழாவது அவதாரம் 'ராமாவதாரம்'. தன்னுடைய இறை சக்தியை காண்பிக்காமல் குழந்தையாகப்பிறந்து சாதாரண மனிதராக, வாழ்ந்து  காட்டியது ராமா அவதாரம். இந்த அவதாரத்தில், ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்–தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர்களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். அவர் அவதரித்த நாள் தான்  ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராம நவமி தோன்றிய வரலாறு : அஷ்டமி, நவமி திதிகளில் எந்த நற்காரியத்தை செய்வதையும் மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?. எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர்? என்று கேட்டனர். அதற்கு மகாவிஷ்ணு, நீங்கள் கவலை கொள்ள வேண்டாம...

ஐஸ்வர்யங்களை அருளும் ருத்ராட்சம்

Image
ஐஸ்வர்யங்களை அருளும் ருத்ராட்சம்  ஆரூர் சுந்தரசேகர். ருத்திராட்சத்தைப் பார்ப்பதாலே மகா புண்ணியம், தொட்டால் கோடி புண்ணியம், அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. வடமொழியில் ருத்ராட்சம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று பொருள். ருத்ரன் + அட்சம் என்பதே ருத்ராட்சம். இதனை சிவனின் கண் என்று சிலரும்  சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று வேறு  சிலரும் சொல்கின்றனர். தேவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த  திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது,  சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து பூமியில் விழுந்த நீர்த் துளியிலிருந்து  ருத்ராட்சம் தோன்றியது என சிலரும், கடும் தவம் செய்து கொண்டிருந்த  சிவபெருமான்  தவம் முடிந்து கண் விழித்த சமயம்,  கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும் , சிவபெருமானின் நெற்றிக்கண்ணில்  உள்ள கண்மணியே    ருத்ராட்சமாக மாறியதாகவும் சொல்கிறார்கள். ருத்ராட்சம் அணிபவரை சிவபெருமான் கண்போலக் காப்பாற்றுவார். எனவே ஐந்து முகம் கொண்ட...