Posts

Showing posts from March, 2019

பங்குனி உத்திரத்தின் மகிமை...

Image
பங்குனி உத்திரத்தின் மகிமை... ஆரூர் சுந்தரசேகர்.         நாம் சில  நட்சத்திரத்திற்கு சிறப்பினை  தந்து  விழாக்கள் எடுப்பதும், விரதம் இருப்பதும் வழக்கம், அதில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை, தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும். பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என்று மற்ற மாநிலங்களிலும் பங்குனி உத்திர விரதத்தை கொண்டாடுகிறார்கள். இந்தத் திருநாளில்தான் மிக  அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகிறது அதில்  பார்வதிபரமேஸ்வரர், ராமர்சீதை திருமணம் மேலும் முருகன்-தெய்வானை, ஸ்ரீரங்கநாதர்-ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. தெய்வங்களின் திருமணம்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு நைவேத்தியம் பழைய சாதமும், மாவடுவும்...

Image
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு நைவேத்தியம் பழைய சாதமும், மாவடுவும்... -ஆரூர் சுந்தரசேகர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் 13.03.2019 அன்று பங்குனி பிரம்மோற்ஸவம் அதிகாலை 5.15மணிமுதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா  வருகிற 23ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. பழைய சாதமும், மாவடுவும்... பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் பழைய சாதமும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் பெருமானின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்ற நிகழ்ச்சி  நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சாதமும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. இதன் பின்னணி...

காரடையான் நோன்பு விரதம்..காரண காரியம் !

Image
காரடையான் நோன்பு விரதம்..காரண காரியம் ! ஆரூர் சுந்தரசேகர். காரடையான் நோன்புதான் பெண்களால்  அனுஷ்டிக்கப்படும்    விரதங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சௌமாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள்  வழிவழியாக அனுஷ்டிக்கும் இந்த விரதம் எவ்வாறு வந்தது என்பதைப்பற்றி  பார்ப்போம்.   மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் புராண காலம் தொட்டு தமிழகத்தில்  காரடையான் நோன்பு விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா,கனடா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாட்டு நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.    தமிழகத்தில்  காரடையான் நோன்பு விரதம் இருப்பதைபோல், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள...

மஹா சிவராத்திரி...விவரம் அறிவோமா...

Image
மஹா சிவராத்திரி...விவரம் அறிவோமா... - ஆரூர் சுந்தரசேகர்.   மஹா சிவராத்திரி 2019 மார்ச் 4 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று  வருகிறது.     எத்தனையோ இரவுகள் இருக்க மாசி மாதத்து தேய்பிறைச்   சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹா சிவராத்திரி ஆனது? விவரம் அறிவோம்.       மஹா சிவராத்திரி நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரியின் மேன்மை, ஆகமவிதிகளை சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம், உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.    கந்த புராணத்தில்  மஹா சிவராத்திரி அன்று அடி,முடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்ததாக கூறப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரியை பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஊழிக்காலத்தில் உலகப் பிரளயத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், பார்வதி  பரமேஸ்வரனை நினைத்து  மாசிமாதம் தேய்பி...