Posts

Showing posts from December, 2019

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்... வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்...

Image
கார்த்திகை தீபம் ஏற்றுவோம்... வாழ்க்கையில் ஏற்றம் பெறுவோம்... ஆரூர் சுந்தரசேகர்.        பன்னிரு தமிழ் மாதங்களிள் ஒன்று தான் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம் என்றதும் அனைவருக்கும் `கார்த்திகைத் தீபத் திருவிழா’ தான் நினைவிற்கு வரும். தமிழகத்தில் தான் கார்த்திகை தீப விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தமிழரின் தொன்மையான பண்டிகை. தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளைக் கொண்டாட ஆரம்பிக்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடியதாக சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.      கார்த்திகை மாத பௌர்ணமி தினமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளன்று நாம் `கார்த்திகைத் தீபத் திருவிழாவாக கொண்டாடுகின்றோம். கார்த்திகை தீபம்  என்றவுடன்  திருவண்ணாமலை தீபம் தான் நம் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.         கார்த்திகைத் தீபத் திருநாளில் இறைவன் ஒளி ரூபமானவன் என்பதை தத்துவார்த்தமாக விளக்கும் பொருட்டே தமிழர்கள் அனைவரும் கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டிற்கு உள்ளேயும் தீபங்களை ஏற்ற...

சோமவார விரத மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்!!!

Image
சோமவார விரத மகிமை பற்றி தெரிந்துகொள்வோம்!!! ஆரூர் சுந்தரசேகர்.      கார்த்திகை மாதத்தில் முக்கியமான விரதங்களில் கார்த்திகை மாத சோமவாரம் விரதம் சிறப்பான விரதமாகும்.      கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும்      உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.     சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று பொருள். சோமன் என்றால் பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்று அர்த்தம். சந்திரனுக்கு சோமன் என்ற ஒரு பெயர் உண்டு. இதை முதன்முதலில் சந்திரன் அனுஷ்டித்ததாகவும்  அதன் காரணமாகவே இதற்கு சோமவார விரதம் என்று பெயர் வந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.      சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.       சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கல...

சிறப்பு வாய்ந்த கிரிவலம் ... வலம் வருவோம்,வளம் பெறுவோம்!!

Image
சிறப்பு வாய்ந்த கிரிவலம் ... வலம் வருவோம்,வளம் பெறுவோம்!! ஆரூர் சுந்தரசேகர்.         “நினைத்தாலே முக்தி தரும்” ஸ்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக இருக்கிறது.                திருவண்ணாமலை ஸ்தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியதாகவும் மற்றும் மகா சிவராத்திரி தொடங்கியதாகவும் புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.           ஆயுட் காலத்தை அதிகரிக்க திருக்கடையூர். பிணிகளை போக்க வைதீஸ்வரன் கோயில். சனி தோஷம் நீங்க திருநள்ளாறு. ஆனால்  ஊழ்வினை (பிறவிப்பிணி) நீங்க திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் மட்டுமே முடியும் என்பது ஐதீகம்     அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள்.    மலையே சிவனாக கா...