Posts

Showing posts from July, 2020

சென்னையிலே பஞ்சபூத ஸ்தலங்கள்!!!

Image
சென்னையிலே பஞ்சபூத ஸ்தலங்கள்!!! ஆரூர். சுந்தரசேகர்.     நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்சபூதங்கள்   சேர்க்கையினால் இந்த பிரபஞ்சமும் மற்றும் ஜீவராசிகளும் உண்டானது.   நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்சபூதங்களால் தான் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.     ‘நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’  என்கிறது தொல்காப்பியம்.  இதனை உணர்த்தும் வகையில் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய நூலான புறநானூற்றின் மூலம் அறியலாம்.     தென் இந்தியாவில் கீழ்கண்ட பஞ்ச பூத ஸ்தலங்கள் பக்தர்களிடையே பிரசித்தி பெற்று விளங்குகின்றன. நிலம்       (ஶ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்)  நீர்          (ஶ்ரீஜம்புலிங்கேஸ்வரர் கோயில், திருவானை...

சென்னைக்கு அருகே திருவேற்காட்டில் அஷ்ட லிங்க தரிசனம்!

Image
சென்னைக்கு அருகே திருவேற்காட்டில் அஷ்ட லிங்க தரிசனம்! ஆரூர்.சுந்தரசேகர்.       திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையை சுற்றி வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசிக்க முடியும். அதேபோல் சென்னையில் திருவேற்காடு ஶ்ரீவேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்க கோயில்கள் உள்ளன.          திருவேற்காடு என்றதும் தேவி கருமாரி அம்மன் கோயில் நினைவிற்கு வரும். ஆனால் தேவி கருமாரி அம்மன் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலமாகப் போற்றப்படும் ஶ்ரீபாலாம்பிகை சமேத ஶ்ரீவேதபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.     நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது.     திருவேற்காடு திருத்தலத்துக்கு அகத்தியர் விஜயம் செய்தபோது, அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமணக் காட்சி கொடுத்த ஸ்தலமாகும். இங்கு சிவலிங்கத்தின் பின்னால் கிழக்கு நோக்கி ...

பெருமைமிக்க மயிலாப்பூரில் சப்த சிவஸ்தலங்கள்!!

Image
பெருமைமிக்க மயிலாப்பூரில் சப்த சிவஸ்தலங்கள்!! ஆரூர்.சுந்தரசேகர்.      மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், இது சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.முன்பு திருமயிலை எனப் பெயர்பெற்றிருந்த இந்த சிவஸ்தலமே தற்போதைய மயிலாப்பூர் ஆகும். இந்த ஸ்தலத்தை மயில், ஆர்ப்பு, ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானது. அதாவது, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடம் என்று அர்த்தம்.   இதைத்தவிர மயூராபுரி, மயூராநகரி என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனாரும், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும் அவதரித்த தலமாகும். திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்ததாக சிலர் கூறுகின்றனர்.              மயிலாப்பூர் என்றவுடன் எல்லோருக்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான் நினைவிற்கு வரும். ஆனால்,   கபாலீஸ்வரர் கோயில் அருகே ஆறு பழமையான சிவாலயங்கள் இருப்பது யாருக்கும் அவ்வளவாக தெரியாது.        மைலாப்பூரில் அருகரு...

சென்னைக்கு அருகிலேயே நவக்கிரக ஸ்தலங்கள்!!

Image
சென்னைக்கு அருகிலேயே நவக்கிரக ஸ்தலங்கள்!! ஆரூர். சுந்தரசேகர்.         நமது வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் நவக்கிரகங்களின் சுழற்ச்சியால் வருகிறது என்ற நம்பிக்கை தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.        தமிழ்நாட்டில் நவகிரகங்கள் ஸ்தலங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. சூரியனார் கோவில் (சூரியன்), திங்களூர் (சந்திரன்), வைத்தீஸ்வரன் கோயில் (அங்காரகன்), திருவெண்காடு (புதன்), ஆலங்குடி (குரு), கஞ்சனூர் (சுக்கிரன்), திருநள்ளாறு (சனி), திருநாகேஸ்வரம் (ராகு), கீழ்பெரும்பள்ளம் (கேது) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில்கள் உள்ளன.       சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர்.  சென்னைக்கு அருகிலுள்ள நவக்கிரக ஸ்தலங்கள்: 1. கொளப்பாக்கம் (சூரியன்) 2. சோமங்கலம்  (சந்திரன்) 3.  பூந்தமல்லி (அங்காரகன்) 4. கோவூர் (புதன்) 5. போரூர் (குரு) 6. மாங்காடு (சுக்ரன்) 7.பொழிச்சலூர் (சனி) 8. குன்றத்தூர் (ராகு) 9....